சாலை விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் ஏற்பட்ட சாலை விபத்தில் அந்நாட்டு நீர் வழங்கல்துறை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். 

காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் கார் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்த, பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.

Night
Day