ஆஸ்திரேலியா : பிலிப் தீவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியாவின் கடலில் மூழ்கி 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறையை கொண்டாடுவதற்காக  ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அவர்கள் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுகள் பகுதியில் கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேர் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த மீட்புப்படையினர் 4 பேரையும் மீட்டபோது அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த தக​வலை கான்பெராவில் உள்ள இந்திய ​தூதரகம் தெரிவித்துள்ளது. 

Night
Day