பொன்முடிக்கு எதிரான வழக்கு - டிஜிபிக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது  வழக்கு  ஆணவங்களை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழங்க உத்தரவிட்டு அதன் மீது அவர்கள்  பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

Night
Day