புதுச்சேரி: வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனம் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு சென்ற புதிய இருசக்கர வாகனத்தை வேட்டி சட்டை அணிந்து வந்த மர்ம நபர் திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. முத்தியால்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 22ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் வேட்டி, சட்டை அணிந்து வந்த நபர், சங்கரின் வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்வது தெரியவந்தது. போலீசார் அக்காட்சிகளை வெளியிட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Night
Day