மதீனாவில் பெய்த பலத்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சவுதி அரேபியாவின் புனித நகரமான மதீனாவில் பெய்த பலத்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள, நபிகள் நாயக மசூதியின் உள்ளே இஸ்லாமியர்கள் பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்த போது மழைநீர் உள்ளே சென்றது. மேலும் வெள்ளப்பெருக்கில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, மதீனா பகுதியில் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சவுதி அரேபிய தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சவுதி அரேபியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Night
Day