கோவை: வழக்கறிஞரின் 2 செல்போன்களை திருடிய மர்மநபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே நள்ளிரவில் மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை காந்திபுரம் 7வது வீதியில் வழக்கறிஞர் மீனாட்சி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். கடந்த 26ம் தேதி மூவரும் வீட்டினுள் உறங்கி கொண்டிருந்தபோது, முகத்தை மறைத்தபடி வீட்டினுள் நுழைந்த மர்மநபர் 2 செல்போன்களை திருடி சென்றுள்ளார். மறுநாள் காலை செல்போன் மாயமானதை அறிந்த மீனாட்சி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்மநபர் திருட்டில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day