திண்டுக்கல்: குடும்ப பிரச்சனை - 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திண்டுக்கல்லில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வேலை முடிந்து நேற்றிரவு வீடு திரும்பிய போது மனைவி மேனகா மற்றும் மகள்கள் ஹிந்துவாஹினி, தானியஸ்ரீ ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சீனிவாசன் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மேனகா பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day