திருச்சி: மலக்குடலில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த ஆண் பயணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயில் இருந்து பேஸ்ட் வடிவில் கடத்திவரப்பட்ட 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவரை சோதனையிட்டபோது, அவரது மலக்குடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. 74 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day