க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
புதுச்சேரியில் திருணமாகி இரண்டே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த தமிழ்மணியும், ரம்யாவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ரம்யாவின் சம்பளத்தை தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டுமென தமிழ்மணி வற்புறுத்தியதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரம்யா, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தமிழ்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி