பிளஸ் 1 மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு - போக்சோவில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே டியூசன் சென்டரில் படித்த  பிளஸ் ஒன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரான ரமேஷ் என்பவர் கும்பகோணம் நாச்சியார் கோவில் பகுதியில் டியூசன் நடத்தி வருகிறார். இந்நிலையில் அங்கு  பயின்று வரும் பிளஸ் ஒன் மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்தபுகாரின் பேரில்  ஆசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day