நகை பட்டறை உரிமையாளரை தாக்கி ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை யானைக்கவுனி பகுதியில் நகை பட்டறை உரிமையாளரை தாக்கி 80 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் யானைகவுனி வெங்கட்ராயன் தெருவில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறைக்கு நகை வாங்குவதுபோல் வந்த இரு நபர்கள், ஜெகதீஸை தாக்கி கட்டிப்போட்டு விட்டு 80 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும் அவர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து நொறுக்கி டிவிஆர் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இதனையடுத்து ஜெகதீஸை அவரது சகோதரர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதுகுறித்து போலீசார் தடயங்களை சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி-களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Night
Day