ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே சொத்து தகராறு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் பரணம் அருகே உறவினர்களிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் ஒரு தரப்புக்கு சாதகமாக காவல்துறை துணை போவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 80 வயது முதியவர் தங்கராசுவுக்கும் இவரது உறவினரான ஆயுதப்படை காவலர் சேகர் மற்றும் அவரது மனைவி கவிதாவுக்கும் இடையே நிலதகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கவிதா கிரையம் செய்தாக கூறப்படும் இடத்தில் அத்துமீறி கழிவறை கட்ட முயன்றுள்ளார். இதனை தங்கராசுவும், அவரது மனைவியும் தட்டிகேட்டுள்ளனர். அப்போது போலீசாரை வைத்து முதியவர்களை காவல்நிலையத்தில் இருக்க வைத்துவிட்டு, சேகரும், கவிதாவும் கட்டுமான பணியை தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day