ரயில் படியில் பயணம் செய்த வட மாநில இளைஞர் தவறி விழுந்து பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அருகே ஓடும் ரயிலில் படியில் பயணம் செய்த வட மாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாமிலிருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுனில் ரப்பா என்ற இளைஞர் படியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். ரயில் வேலூர் அருகே வந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day