பணப்பட்டுவாடா தொடர்பாக சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிரடி ஐ.டி சோதனை - ரூ.4 கோடி பணம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கணக்‍கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய்க்‍கும் அதிகமான ரொக்‍கத்தை பறிமுதல் செய்தனர்.

பணப்பட்டுவாடா நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் நேற்றைய தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். சென்னை , சேலம், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்‍கத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Night
Day