க்ரைம்
கரூர் பெருந்துயரம் - 10 எஸ்.ஐ.க்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெ...
நெல்லை அருகே மருந்து விற்பனையாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களின் அடையாளம் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் 2-வது தெருவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், தனது குடும்பத்துடன் உடன்குடியில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 13 பவுன் நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த வீட்டின் அருகில் உள்ள கோகுல்நாத் என்பவரது வீட்டிலும் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெ...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...