பெண் காவலரிடம் தகராறு செய்த இந்து முன்னணி நிர்வாகி ஜாமீன் கோரி மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபாசமான முறையில் பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  கோயில் முன் அமர்ந்து மது அருந்திய குபேந்திரனை தட்டி கேட்ட பெண் காவலரிடம் அவர், தகாத முறையில் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குபேந்திரன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மீண்டும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த செய்த நீதிபதி தண்டபாணி, குபேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

varient
Night
Day