சொத்துக் குவிப்பு வழக்கு : முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்துக் குவிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்த முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த முன்னாள் சர்பதிவாளர் ஜானகிராமன் அவரது மனைவி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்திக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் 2001-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

varient
Night
Day