29ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 29ம் தேதி 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அம்மாவட்டங்களுக்கு இந்திய வானிலி ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

Night
Day