சேலம்: தொழில் செய்வதாக கூறி ரூ.6 கோடி வரை கடன் பெற்று தம்பதி மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தொழில் செய்வதாக கூறி, 6 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் - வளர்மதி தம்பதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் தொழில் செய்வதாக கூறி சுமார் 6 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியாக வரவு, செலவு தொகையை கொடுக்காத நிலையில், இருவரும் தலைமறைவாகினர். இதனையறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள், காட்டுக்கோட்டையில் உள்ள அவரது தம்பியை பிடித்து போலீசில் ஒப்படைத்து, தலைமறைவான வளர்மதியை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Night
Day