சென்னை : பிட்காயின் வியாபாரம் எனக்கூறி ரூ.55.38 லட்சம் மோசடி - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தனியார் வங்கி ஊழியரிடம் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பேஸ்புக் மூலம் ஒருவரை தொடர்பு கொண்டு டிரேடிங் செய்ய முயன்றுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர், பிட்காயின் வியாபாரம் எனக்கூறி 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், ஆவடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த டோமனிக் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day