ஹோட்டலில் தகராறு - இளைஞரை கொலை செய்தவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

உத்தமபாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்ற போது கம்பம் பகுதியை சேர்ந்த முகிலன், சிபி சூர்யா தரப்பு அவரை மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஹோட்டலுக்கு வெளியேயும் தகராறு தொடர்ந்த நிலையில், செருப்பு தைக்கும் கடையில் இருந்த கத்தியை எடுத்த சிபி சூர்யா சத்தியமூர்த்தியை சரமாரியாக குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் சிபி சூர்யாவை கைது செய்த நிலையில், தப்பியோடிய முகிலனை தேடி வருகின்றனர். 

Night
Day