சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை எண்ணூரில் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பணத்திற்காக ஒன்றரை வயது குழந்தையை கடத்தி சென்ற போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த சுஜித் மண்டல் - சஞ்சனா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே பிளாட்பாரத்தில் உறங்கி விட்டு, எழுந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ரயில்வே போலீசில் புகார் தெரிவிக்க, சம்பவம் குறித்து அனைத்து காவல் கட்டுப்பட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பில், சந்தேகத்துகிடமான இருவர், 3 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தையை விற்க முயல்வதாக, அப்பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவலளித்தனர். தகவல் அறிந்த போலீசார் கார்த்திக், செல்வத்தை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

Night
Day