கும்பகோணம்: பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பேக்கரி கடைக்குள் புகுந்து உரிமையாளரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகளை கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைத்து போலீசார் தேடி வருகின்றனர். சுவாமிமலை தெற்குவீதியை சேர்ந்த முத்துகுமார் என்பவர், திருவலஞ்சுழி பகுதியில் தீரா என்ற பெயரில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 2 போதை ஆசாமிகள் தின்பண்டங்களை வாங்குவது தொடர்பாக முத்துகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற கடை ஊழியர் விஸ்வநாதன் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதில், தலையில் படுகாயமடைந்த முத்துகுமார், விஸ்வநாதன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day