தேனி: குத்துராய பெருமாள் கோவில் மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 2 ஹெக்டேர் பரப்பளவிலான மூலிகை மரங்கள் எரிந்து நாசமானது. ஆண்டிப்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள குத்துராய பெருமாள் கோவில் மலைப்பகுதியில் திடீரென பற்றிய தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், கட்டுக்கடங்காமல் பரவிவரும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த காட்டுத்தீயில் மலைவேம்பு, தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட ஏராளமான மூலிகை மரங்கள் எரிந்து நாசமானது.

Night
Day