120 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய ஃபத்தா ஏவுகணை சோதனை - பாகிஸ்தான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

120 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஃபத்தா ஏவுகணை சோதனையை  பாகிஸ்தான் பாதுகாப்பு படை மீண்டும் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு& காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே கடந்த சனிக்கிழமை அன்று 450 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட "அப்தாலி" ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. இந்நிலையில் இந்துஸ் மலைப்பகுதியில் 120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட "ஃபத்தா" எனும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படுகிறது. ஏவுகணையின் துல்லியமான தாக்குதலை மீண்டும் பரிசோதிக்கவும் சோதனை நடைபெற்றதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை தெரிவித்ததாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Night
Day