பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர்.

வடமேற்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஹன்சாவுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாங்கான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 20 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்ற பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Night
Day