30 பயணிகளுடன் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை ஆரப்பாளையத்தில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்த போது, சாலையில் அமைந்திருந்த சென்டர் மீடியனில் எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. உடனடியாக பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Night
Day