போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் 5 நாளாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


நெல்லை போத்தீஸ் ஜவுளி கடையில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவு பெற்றது.

வரி ஏய்ப்பு காரணமாக பிரபல ஜவுளி கடையான போத்தீஸ் நிறுவனத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகளில் கடந்த 12ஆம் தேதி முதல், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை டவுன் வடக்கு ரத வீதியில் உள்ள போத்தீஸுக்கு சொந்தமான 3 ஜவுளி கடைகள், சொர்ண மஹால், வண்ணாரப்பேட்டையில் உள்ள போத்தீஸ் உரிமையாளர் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

varient
Night
Day