மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : இறுதிப் போட்டியில் ரூப்லெப் - ஆகர் நாளை பலப்பரீட்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடைபெற உள்ள ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  பெலிக்ஸ் ஆகர் - ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கோண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டின் போது ஜிரி லெஹெக்கா காயம் காரணமாக வெளியேறியதால் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

Night
Day