பிரேசிலில் கனமழை : 39 பேர் பலி - மாயமான 80 பேரை தேடும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 39 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 80 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day