முதல் தேசிய படைப்பாளர் விருதை வழங்கிய பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல் தேசிய படைப்பாளர் விருதை 23 பேருக்கு வழங்கி பிரதமர் மோடி கௌரவித்தார். கதை சொல்லல், சமூக மாற்ற ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட களங்களில் இளம் படைப்பாளிகளின் சிறப்பை அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாக தேசிய படைப்பாளிகள் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், முதல் தேசிய படைப்பாளர் விருதுக்கு 20 பிரிவுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு சுற்றில், டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருது உள்ளிட்ட பிரிவுகளில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கி கொளரவித்தார்.

varient
Night
Day