மனிதனைக் கடித்த கொடிய விஷப் பாம்பு 5 நிமிடத்தில் இறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரிதினும் அரிய நிகழ்வாக, மத்திய பிரதேசத்தில் மனிதனைக் கடித்த கொடிய விஷப் பாம்பு ஒன்று அடுத்த சில நிமிடங்களில் இறந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலகாட் மாவட்டம்  குட்சோடி கிராமத்தை சேர்ந்த 25 வயதான சச்சின் நாக்பூரே, தனது பண்ணைக்குச் சென்ற போது தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, அவரைக் கடித்த பாம்பு அடுத்த 5-6 நிமிடங்களுக்குள் இறந்துள்ளது. இது மிகவும் அரிதினும் அரிதான நிகழ்வு என்று நிபுணர்கள் கூறியுள்ளார். இதனிடையே பாம்பிடம் கடிவாங்கிய சச்சின், பல்சா, மாம்பழம், துவார், ஆஜன், கரஞ்சி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் குச்சிகளை பயன்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக பல் துலக்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த மூலிகை மரங்களின் கலவையே பாம்பின் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி, அதன் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

Night
Day