பத்திரப்பதிவுத்துறைக்கு சொந்தமான சி.டி.க்கள் சாலையோரம் கிடந்த அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு சொந்தமான, அலுவலக அரசு முத்திரையுடன்கூடிய சி.டி.க்கள் சாலையோரம் சிதறி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள தெற்கு மள்ளல் பகுதியில் கால்நடை பயிற்சிக்கு சென்றவர்கள் சாலையோரத்தில் கிடந்த 50க்கும் மேற்பட்ட சிடிக்களை எடுத்து காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். வயல்வெலியில் அரசு முத்திரை கொண்ட சிடிக்களை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பத்திரப்பதிவுத்துறையின் சிடிக்கள் சாலையோரம் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day