ஏடிஎம்மில் பணத்தை செலுத்த சென்ற நபருக்கு நேரிட்ட விபரீதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணத்தை செலுத்த சென்ற நபரை வழிமறித்து மூன்று பேர் தாக்கி பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மைனர் அலி என்பவர், அம்பத்தூரில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். மைனர் அலி, முகமது என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பணத்தை ஏடிஎம்மில் செலுத்த சென்ற போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை வழிமறித்து பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day