தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல் பேசியது ஆணவத்தின் உச்சம் - பாஜக தலைவர் எடியூரப்பா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தக்லைப் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது கன்னடம் மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசினார். இதற்கு, பல்வேறு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, தாய்மொழியை நேசிக்க வேண்டும் எனவும், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள கமல்ஹாசன், தமிழ் மொழியை போற்றுவதற்காக கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம் என்று பதிவிட்டுள்ளார். 

Night
Day