பாக். விமானப்படை தளத்தை அழித்ததே இந்தியாவின் பலம் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சில நிமிடங்களில் சுக்கு நூறாக அழித்ததே இந்தியாவின் பலம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.


பீஹார் மாநிலம் கரகாட் மாவட்டத்தில் சுமார் 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் எனவும் கூறினார். சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் வலிமையை எதிரிகள் கண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

Night
Day