எழுத்தின் அளவு: அ+ அ- அ
நகைக்கடன்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
அண்மையில் தங்க நகைகள் மீதான கடன்களை வழங்கும் விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றங்களை மேற்கொண்டதுடன் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய விதிமுறைகள் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்க நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், புதிய விதிகளை அமல்படுத்த சிறிது அவகாசம் வழங்கி வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.