டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம்ஆத்மி கட்சியினர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம்ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்த போவதாக ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்திருந்தனர். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தாலும் தடையை மீறி முற்றுகையில் ஈடுபடுவோம் என ஆம்ஆத்மி அறிவித்திருந்ததால் பிரதமர் இல்லம் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனையும் மீறி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினர், ஆம் ஆத்மி கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Night
Day