ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பாய் சோரன் அரசு வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரபரப்பான அரசியல் சூழலில் ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. 

நில மோசடி வழக்கில், ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது பெரும்பான்மையை இன்றைக்குள் நிரூபிக்க வேண்டுமென அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக  முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். 

Night
Day