ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 26ஆம் தேதி இரவு 'மோன்தா' புயல் உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டது. 

இந்த நிலையில், மோன்தா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து, மோன்தா புயல் ஆந்திர கடற்பகுதியை நோக்கி நகர்ந்து சென்ற நிலையில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. புயல் காரணமாக காக்கிநாடாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Night
Day