சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகல் மேலும் 920 ரூபாய் உயர்ந்தது. இதன்மூலம் ஒரே நாளில் அதிரடியாக சரவனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 250 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 325 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மறுபுறம், தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் நாள்தோறும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

Night
Day