ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு - பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் சர்பால் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சோனாமார்க்கின் சர்பால் பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவின் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல உரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு ஒன்று சேதமடைந்தது. ரம்பன் மற்றும் சம்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.

Night
Day