குஜராத்: ஜாம் நகர் விமான நிலையத்திற்கு "சர்வதேச" அந்தஸ்து - மத்திய அரசு தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முகேஷ் அம்பானி மகனின் திருமண விழாவையொட்டி, குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஜாம் நகரில் நடைபெறும் திருமண முந்தைய விழாவிற்கு, பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட உலக அளவிலான தொழிலதிபர்களும், பிரபலங்களும் வருவதற்கு வசதியாக, ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வரும் 5ம் தேதி வரை சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Night
Day