அரசியல் செயல்பாடுகளில் இருந்து விடுவிக்குமாறு ஜேபி நட்டாவுக்கு கம்பீர் வேண்டுகோள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கிழக்கு டெல்லி எம்பி. கவுதம் காம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கான ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் போட்டியில் முழுநேரம் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கம்பீர் நன்றி தெரிவித்தார். 

Night
Day