இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் Supriya Shrinate மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், காவல்துறையில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார். Supriya Shrinate ஒரு பெண்ணாக இருந்தும், மற்றொரு பெண்ணை தரக்குறைவாக விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய கவுரவத்தையும், கண்ணியத்தையும் மதிக்க வேண்டும் என்றும், Supriya-வின் கருத்துகள் முறையற்றவை என்றும் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...