தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Night
Day