எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் வாழ்க்கையை இழந்த பெண்களை குறிக்கும் வகையில், இந்தியா ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்கு ஆப்ரேசன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்களிடம் மதத்தை பற்றி கேள்வி எழுப்பிய தீவிரவாதிகள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் முன் பலரை சுட்டுக் கொன்றனர். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள் கண் எதிரில், அவர்களுடைய கணவன்மார்கள் சுட்டுக்கொல்லப்ட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர்.
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிந்தூர் என்றால் திருமணத்தின் அடையாளமாக பெண்கள் தலையில் அணியும் குங்குமம் என்று பொருளாகும். தீவிரவாத தாக்குதல் மூலம் பெண்களுக்கு ஏற்பட்ட இழப்பை முன்னிலைப்படுத்திக் காட்டும் வகையில் ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயர் அமைந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய இராணுவத்தால் வெளியிடப்பட்ட லோகோவில் ஆபரேஷன் சிந்தூர் என்பது பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. சிந்தூர் என்ற எழுத்தில் வரும் ஒரு 'ஓ' என்பது ஒரு கிண்ணம் இடம் பெற்றுள்ளது. அதில் உள்ள குங்குமம் சிதறி, 25 பெண்களின் வாழ்க்கைத் துணைவர்களைப் பறித்த இரக்கமற்ற தன்மையைக் குறிப்பதாக இந்த லோகோ அமைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.