ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வக்பு வாரியம் பணமோசடி வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனத்துல்லா கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனத்துல்லா கான், கடந்த 2016ம் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது, விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது, பணமோசடியில் ஈடுபட்டது என அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அமனத்துல்லா கானை கைது செய்துள்ளனர்.

varient
Night
Day