"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நாளில் இந்திய பொறியியல் துறைக்கு அழியாத முத்திரை பதித்த சர் எம். விஸ்வேஷ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துவதாக கூறியுள்ளார். அனைத்துத் துறைகளிலும் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தீர்மானத்தின் மூலம் புதுமையான செயல்பாடுகளை முன்னெடுத்து, கடினமான சவால்களை சமாளிக்கும் பொறியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பட்டுள்ளார்.  

varient
Night
Day