4 தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சியில் மீண்டும் ஒப்பந்த தூய்மைப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4 தூய்மைப் பணியாளர்கள் உடல் சோர்வடைந்தநிலையில், 9வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மாநகராட்சியில் பணியாற்றிய 2 ஆயிரம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை விளம்பர திமுக அரசு கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி பணிநீக்கம் செய்தது. இதனையடுத்து மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணி வழங்க வேண்டும், தங்களை பணி நிரந்தரம் செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உடல் சோர்வடைந்தநிலையில் இருக்கும் தங்களுடன் விளம்பர திமுக அரசு தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தாதது வேதனை அளிக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day